தமிழகஅரசு : சைக்கிள் வேணுமா...?
பள்ளி மாணவ
மாணவிகள் : வேணாம்...
தமிழகஅரசு : ஓ, லேப் டாப் வேணுமா..?
பள்ளி மாணவ
மாணவிகள் : வேணாம்...
தமிழகஅரசு : ஓ ஹோ, இலவச பஸ் பாஸ் வேணூமா..?
பள்ளி மாணவ
மாணவிகள் : வேணாம்...
தமிழகஅரசு : அப்புறம் என்ன தான் வேணும்...
பள்ளி மாணவ
மாணவிகள் : படிக்க புக் குடுங்க முதல்ல...
இது தான் தமிழகத்து பள்ளிகளின் நிலைமை, சமச்சீர் கல்வி பிரச்சனையில் இன்னும் சில பள்ளிகளுக்கு புத்தகம் வழங்கப்படவில்லை......
சமச்சீர் கல்வி திட்டம் கண்டிப்பாக வந்துவிடும் என்று சில பள்ளிகள் பழைய புத்தகங்களை வைத்து நடத்த ஆரம்பித்துவிட்டனர். ஆனால் மாணவ, மாணவிகள் தயக்கத்துடனேயே படிக்கிறார்களாம்.......
பாதி படிச்சு புத்தகம் மாறிடுச்சுனா....? இது தான் அவங்க பயம். ஆனால் இனிமேல் புதிய பாடத்திட்டம் கொண்டு வர வாய்ப்பே இல்லை. அப்படி தயாரிக்கனும் என்றாலும் அதற்கு எந்த ஆசிரியர்களும் தயாராக இல்லை...
முன்னாடி எல்லாம் வருடத்தின் கடைசியில் கல்வி சுற்றுலா நடக்கும். இப்ப வருடத்தின் துவக்கத்திலேயே களப்பயிற்சி எனும் பெயரில் தினம் தினம் சுற்றுலா தான்..
பிள்ளைகளை வங்கிகள், தொழிற்சாலைகள், அஞ்சலகங்கள், தாலுகா அலுவலகங்கள், அணைக்கட்டு, கோவில், குளம்னு கூட்டிக்கிட்டு திரியுறாங்க......
என்ன கொடுமைடா இது என்று சொல்ல தோன்றுகிறது........

No comments:
Post a Comment