புதிதாய் திருமணம் செய்து கொண்ட தன் தோழி யோகேஸ்வரியிடம் அவள் தோழி நித்யபிரியா பேசுகிறாள்…
நித்யா: நல்லா இருக்கியா? உன் புருசன் பத்திரமா பாத்துக்கிறானா? சந்தோசமா இருக்கீங்களா?
யோகேஸ் : நல்லா இருக்கேன்டி, அப்பப்ப செல்லமா சண்டை போட்டுப்போம். அப்புறம் கூடிப்போம், ரொம்ப சந்தோசமா இருக்கேன். மகிழ்ச்சி!!
நித்யா: வீட்டு வேலையெல்லாம் ஒரே ஆளா பார்க்க கஷ்டமா இல்லையா?
யோகேஸ்: ஹே, அவன் ஹெல்ப் பண்றான்டி…
நித்யா: என்னது ஹெல்ப் பண்றானா? சூப்பர்பா...
யோகேஸ் : ஆமான்டி, சூப்பரா கோலம் போடுவான், பாத்திரம் கழுவி குடுப்பான்,சமையலுக்கு வெங்காயம்,தக்காளி எல்லாம் கட் பண்ணித் தருவான், ரொம்ப ஹெல்ப்பா இருக்கான்டி
நித்யா: எங்க பசங்கெல்லாம் அப்படித்தான் இருப்பாங்க, உங்கள்ள தான் நான் ஒசந்தவன் அப்படி இப்படின்னு மீசையை முறுக்கிகிட்டு திரிவாங்க, இந்தாண்ட கிடக்குறத எடுத்து அந்தாண்ட போட மாட்டானுங்க, வேலைக்கு போகாட்டியும் கூட வீட்ல இருந்துகிட்டு ஓவரா பண்ணுவாங்க, நமக்கு உடம்பு சரியில்லையின்னாக் கூட ஒரு வேலையையும் அவனுங்களே செஞ்சுக்க மாட்டானுங்க.. எங்க பசங்க வேலைக்கும் போய் நல்லா சம்பாதிப்பாங்க வீட்டுக்கு வந்தும் பொண்ணுங்களுக்கு உதவியா இருப்பங்க!!! பாத்தியா எப்டி அக்கறையா இருக்காங்கன்னு????
யோகேஸ்: ஆமான்டி, அதை நானும் நெனைச்சுப் பார்த்தேன். எங்க வீட்லயும் எல்லா வேலையுமே எங்க அத்தை தான் செய்யும் பாவம். ஒரு சின்ன உதவி கூட எங்க மாமா செய்ய மாட்டாரு, இப்பத்தான் அதையெல்லா யோசிச்சுப் பாக்கலையில, நான் லக்கிடீ..
நித்யா: ரொம்ப சந்தோசம்டி..
(இது கற்பனையல்ல முழுக்க முழுக்க உண்மையான உரையாடல், சரி இது எப்படி உங்களுக்கு தெரியும்னு நீங்க கேட்க வருவது புரியுது, நான்கு பேருக்கு நல்ல மெசேஜ் சொல்லனும்னா ஒட்டுக் கேட்குறது தப்பே இல்லை)
நித்யா: நல்லா இருக்கியா? உன் புருசன் பத்திரமா பாத்துக்கிறானா? சந்தோசமா இருக்கீங்களா?
யோகேஸ் : நல்லா இருக்கேன்டி, அப்பப்ப செல்லமா சண்டை போட்டுப்போம். அப்புறம் கூடிப்போம், ரொம்ப சந்தோசமா இருக்கேன். மகிழ்ச்சி!!
நித்யா: வீட்டு வேலையெல்லாம் ஒரே ஆளா பார்க்க கஷ்டமா இல்லையா?
யோகேஸ்: ஹே, அவன் ஹெல்ப் பண்றான்டி…
நித்யா: என்னது ஹெல்ப் பண்றானா? சூப்பர்பா...
யோகேஸ் : ஆமான்டி, சூப்பரா கோலம் போடுவான், பாத்திரம் கழுவி குடுப்பான்,சமையலுக்கு வெங்காயம்,தக்காளி எல்லாம் கட் பண்ணித் தருவான், ரொம்ப ஹெல்ப்பா இருக்கான்டி
நித்யா: எங்க பசங்கெல்லாம் அப்படித்தான் இருப்பாங்க, உங்கள்ள தான் நான் ஒசந்தவன் அப்படி இப்படின்னு மீசையை முறுக்கிகிட்டு திரிவாங்க, இந்தாண்ட கிடக்குறத எடுத்து அந்தாண்ட போட மாட்டானுங்க, வேலைக்கு போகாட்டியும் கூட வீட்ல இருந்துகிட்டு ஓவரா பண்ணுவாங்க, நமக்கு உடம்பு சரியில்லையின்னாக் கூட ஒரு வேலையையும் அவனுங்களே செஞ்சுக்க மாட்டானுங்க.. எங்க பசங்க வேலைக்கும் போய் நல்லா சம்பாதிப்பாங்க வீட்டுக்கு வந்தும் பொண்ணுங்களுக்கு உதவியா இருப்பங்க!!! பாத்தியா எப்டி அக்கறையா இருக்காங்கன்னு????
யோகேஸ்: ஆமான்டி, அதை நானும் நெனைச்சுப் பார்த்தேன். எங்க வீட்லயும் எல்லா வேலையுமே எங்க அத்தை தான் செய்யும் பாவம். ஒரு சின்ன உதவி கூட எங்க மாமா செய்ய மாட்டாரு, இப்பத்தான் அதையெல்லா யோசிச்சுப் பாக்கலையில, நான் லக்கிடீ..
நித்யா: ரொம்ப சந்தோசம்டி..
(இது கற்பனையல்ல முழுக்க முழுக்க உண்மையான உரையாடல், சரி இது எப்படி உங்களுக்கு தெரியும்னு நீங்க கேட்க வருவது புரியுது, நான்கு பேருக்கு நல்ல மெசேஜ் சொல்லனும்னா ஒட்டுக் கேட்குறது தப்பே இல்லை)




