Monday, 31 October 2011

டாப் 10

பார்க்க.. இங்கே சொடுக்கவும்...

டாப் 10 பாடல்களும், படங்களும்...

(குறிப்பிட்ட காலம் மட்டுமே)

- இணையத்திலும் நானே தான்...,

பட்டுகோட்டையார்

திரைப்பட பாடலாசிரியர் பட்டுகோட்டை கல்யாண சுந்தரத்தினை பற்றி படிக்க

http://www.tamilcinema.com/general/poet/pattukottaikalyanasundaram.asp




உடுமலை நாராயணகவி

பாடலாசிரியர் உடுமலை நாராயணகவி பற்றி படிக்க...

http://www.tamilcinema.com/general/poet/narayanakavi.asp



ரா ஒன் விமர்சனம்

காசு கொடுத்து படம் பார்க்க சொன்னாங்க...
பில் வேணாம் படத்தை பற்றி  விமர்சனம் குடுங்கனு கேட்டாங்க...
 கொடுத்துட்டேன்...


ரா ஒன் விமர்சனம்


-தமிழ்தாசன் 
ஆகிப்போன 
தாஸ்..,

Thursday, 27 October 2011

ஜெயிக்க போவது யாரு

ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் ”ஜெயிக்கப்போவது யாரு” ரியாலிட்டி ஷோ - விமர்சனம் படிக்க...


சினிமாவும் நானும்

அண்ணன் மகாராசன் எனக்கு பரிசளித்த புத்தகம் ”சினிமாவும் நானும்” - இயக்குனர் மகேந்திரன் எழுதியது...


விமர்சனம் படிக்க. . .


தமிழ்சினிமா இணையதளம்


-தாஸ்..,

Saturday, 22 October 2011

தேர்தல் கருத்துகணிப்பு



நான் வேலை பார்த்துக்கொண்டு இருக்கும் சாப்ட்வியூ ஊடக கல்லூரியில்  சென்னை மாநகர மேயர் பதவிக்கான தேர்தல் கருத்து கணிப்பு அங்கு பயிலும் மாணவர்களை கொண்டு நடத்த பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.


வகுப்பு எல்லாம் இருக்காது வேற எதாவது வேலை பார்க்கலாம் என்று மகிழ்வில் இருந்த போது எனக்கும் இந்த தேர்தல் கருத்துகணிப்பில் ஒரு வேலை  தரப்பட்டது.


நான் தான் அதற்கு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டேன்.  அனுபவமே இல்லாத எனக்கா இந்த வேலை என்று ஆரம்பத்தில் நினைத்தேன். எப்படியாவது எதாவது காரணம் சொல்லி தப்பிக்கலாம் என்று  பார்த்தால் முடியவில்லை.

எங்கள் கல்லூரியின் நிறுவனர் மரியாதைக்குரிய திரு.’கணியரசு’ ஆண்டோ பீட்டர் சார்  வயது வித்தியாசம் எல்லாம் பார்க்க மாட்டார், இந்த வேலைக்கு இவன் தகுதியானவன் என்று அவருக்கு தோன்றிவிட்டால் அடுத்து யார் என்ன சொன்னாலும் விஜய் மாதிரி தான். நான் ஒரு தடவை முடிவு எடுத்துட்டா எம் பேச்சை நானே கேட்க மாட்டேன் எனும் பாணி தான் அவருடையதும்...


வசமா மாட்டிக்கிட்டேனே என்று இருந்தது, சரி, பார்த்துக்கொள்ளலாம் நம்மை மீறி எதுவும் நடந்து விடாது என்று  வேலையில் இறங்கினேன்.

அக்டோபர் 11,12,13 ஆகிய மூன்று நாட்கள் மாணவர்கள் சென்னை முழுவதும் சூறாவளி சுற்றுபயணம் போல இருந்தார்கள்.

மூன்று நாளும்  என் போன் செம பிசி, காலையில் பேட்டரி புல்லாக இருந்தால் மாலை பேட்டரி டவுன் ஆகும்.

சார்...,

இங்க இருந்து அங்க எப்படி போறது...?

என்ன பஸ் நம்பர் ?

பக்கத்துல எதாவது நல்ல ஹோட்டல் இருக்கா ?

இங்க ஒழுங்கா ரெஸ்பான்ஸ் பண்ண மாட்றாங்க !

மதிக்கவே இல்ல!!

ஒரே வெயில்!!!

திட்றாங்க சார்....

போங்க உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லயா ?

அசிங்கமா இருக்கு...

இங்க வாங்க சார்...

பேலன்ஸ் இல்ல அதான் 12 மிஸ்டுகால் கொடுத்தேன்

இதெல்லாம் அந்த 3 நாட்கள் நடந்தது..................

காலையில் ஒரு நாள் பயண சீட்டான 30 ரூபாய் டிக்கெட் வாங்கி கொண்டு சென்னை முழுவதும் பயணித்துக்கொண்டே இருந்தேன் . இரவு தான் வெப்பத்தின் தாக்கம் அறிவேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அப்படியே அலுவலகம் சென்று கொஞ்சம் ஏசியில் குளுமையாகி கொண்டு கிளம்புவேன்..

மூன்று நாட்கள் கருத்துகணிப்பு முடிந்து மூன்றாவது நாளின் மாலையில் மாணவர்களின் கருத்துகணிப்பு தாள்களை வாங்கி அவர்கள் ஒத்துழைப்புடனேயே எண்ணிக்கை வேலையும் நடந்தது. இதற்கு விரிவுரையாளர்கள் பத்திரிக்கையாளர் முத்துபாண்டி சாரும், ஒளிப்பதிவாளர் இளையராஜாவும் துணை நின்றார்கள்.

அன்று இரவே எல்லா முடிவுகளும் எங்கள் குழுவுக்கு தெரிந்துவிட்டது 

காலையில் அனைத்து பத்திரிக்கை அலுவலகங்களுக்கும்  அனுப்பி வெற்றி களிப்பில் உட்காந்த போது..........

கருத்து கணிப்பு தடை செய்யப்பட்டுள்ளது, எந்த பத்திரிக்கையும் வெளியிட மறுப்பு என தகவல் காதுக்கு எட்டியது, மாணவர்களிடம் சொன்னபோது ஒரு மாதிரி பார்த்தனர், ஏனெனில் நான் தான் சொன்னேன் அவர்களிடம் அனைத்து பத்திரிக்கையிலும் வரும் என்று...


ஆனால், இப்போது தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டது...

சாப்ட்வியூ ஊடக கல்லூரி மாணவர்களின் உழைப்பு உண்மையானது. எங்கள் கருத்துகணிப்பு தான் வெற்றி பெற்றது...

களத்தில் இறங்கி வேலை பார்த்து...
கலக்கிய எங்கள் கல்லூரி மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்கிறேன்...




இது தான் மாணவர்கள் சென்னை முழுவதும் கொண்டு போனது
பத்திரிக்கைகளுக்காக தயாரான தேர்தல் முடிவுகள் புள்ளி விவரம் உட்பட
களத்தில் மாணவர்கள்



தாஸ்..,

Friday, 21 October 2011

ஏன்டா இப்படி???

சென்னையில் போர் நினைவு சின்னம் அருகில் உள்ள குடிசை பகுதியில் ஆடி மாத  கூல் ஊற்றும் விழாவில் எடுக்கப்பட்ட படங்கள்...


சைபர்சாட் கேமராவில் எடுத்தேன்...

எத்தனை பெரியார் வந்தாலும் திருந்தமாட்டிங்களா.......? என்று எனக்குள்ளயே கேட்டுக்கிட்டு இதை எல்லாம் பிரிண்ட் போட்டு படத்தில் இருப்பவர்களிடமே கொடுத்து காசாக்கி விட்டேன்...
ஒரு சின்ன வியாபாரம்...


அன்பு - காலேஜ் ஸ்டூடண்ட்......!!!! இருந்து என்ன உபயோகம்???


மணி - டிரைவர் - வாயில் வண்டி ஓட்டிட்டான்!!!!

அர்ஜுன் - பள்ளி மாணவன்??? பாஸாகனுன்னு வேண்டி இருப்பான் போல!!!

என்னை விட்டுடுங்கன்னு கெஞ்சியும் விடல!!!
இந்தாண்ட குத்தி அந்தாண்ட வந்துடுச்சே!!!

ஜெகதீஸ் -துறைமுக தொழிலாளி , காதலில் ஜெயிக்க வேண்டுதல்!!!

போட்டி போட்டு குத்தி தள்ளிட்டாங்கப்பா!!!



முதுகில் ஒட்டை போட்டு ஆட்டோ இழுத்தல்

வழி விடுங்கப்பா - பெட்ரோல்  தேவை இல்லை இனி...

ஜெய் கருப்பாயி ஆத்தா...

வாயிலிருந்து கம்பியை வெளியே எடுத்தல் 1

வாயிலிருந்து கம்பியை வெளியே எடுத்தல் 2

வாயிலிருந்து கம்பியை வெளியே எடுத்தல் 3

ஏண்டா குத்துனோன்னு ஆச்சா அன்பு

வாய்டா ப்ளேக் கிரவுண்டா  அது

Thursday, 20 October 2011

பிறந்த நாள்







அக்டோபர் 18

நம்ம பிறந்தநாளை நாம கொண்டாடுனா தரித்திரம்
மற்றவங்க கொண்டாடுனா சரித்திரம்
அப்படி ஒரு பஞ்ச் அவன் சொன்னது...

யோவ் போயா, ட்ரீட் கொடுக்க மாட்டேன்னு சொல்
அதை விட்டுடு இப்படி மொக்கையா எதாவது பேசாத
அவனுக்கு நெருங்கிய நண்பர்கள் சொன்னது...

17 இரவே அட்வான்ஸ் ஹாப்பி பர்த்டே
ஞானசேகரனிடமிருந்து முதல் மெசேஜ் வாழ்த்து
யார் இந்த ஞானசேகரன் தெரியாது அவனுக்கு...

11:30pm க்கு தூங்கியதால் 12:01am க்கு போன் வந்தது
காலையில் அறிவான் போன் பண்ணியவருக்கு தெரியாது
இதை படித்தால் தெரிந்து கொள்வார்....

மெனிமோர் ஹாப்பி ரிட்டன்ஸ் ஆப் த டே
வேரிஸ் த பார்ட்டி தெரியாத எண்ணிலிருந்து மெசேஜ்
விஸ் யூ ஹாப்பி பர்த்டே தெரிந்த எண்ணிலிருந்து மெசேஜ்

மெரினா கடற்கரையை பார்த்துவிட்டு
ஒரு இளநீரால் தாகம் தனித்துவிட்டு
இன்று ஒழுங்காக குளித்துவிட்டு
அவசரமாக கிளம்பிவிட்டான் அறையைவிட்டு...

தங்கை ரேணுகா போன் போட்டு முதல் வாழ்த்து
தம்பி 2பைஸ்டார் கொடுத்து இரண்டாவது வாழ்த்து
மறந்துட்டன்டா நினைவுபடுத்தி அம்மா வாழ்த்து
ஞாபகம்இருந்தது வேலையாஇருந்தேன் அப்பா வாழ்த்து
அண்ணனும் அண்ணியும் அடுத்த அடுத்த வாழ்த்து
அக்கா பையன் ட்ரீட் எங்க மாமா கேட்டுவிட்டு வாழ்த்து...

அலுவலகத்தில்.. ஜம்முன்னு இருக்கிங்க சார் பிறந்த நாளா ?
18ந்தேதியா 19ந்தேதியா சொல்லுங்க குழப்பமா இருக்கே ??
சாரி சார் மறந்தே போய்ட்டேன் !!! சொல்லவே இல்லை???
எல்லா கேள்விக்கும் புன்னகையை உதிர்த்து விட்டான்.......

வகுப்பில் கிளாஸ் எடுத்துக்கிட்டு இருந்தபோது
சார் ஒரு நிமிடம் என்று ஒரு பெட்டியுடன் வந்த மாணவன்
நீங்க சொல்லவில்லை என்றால் எங்களுக்கு தெரியாதா
பெட்டிக்குள் இருந்து கேக் எடுத்து வெட்ட சொன்னான்
என்ன செய்வது என்றே தெரியாமல் விழித்த போது
கையில் கத்தியை கொடுத்தார்கள் மாணவர்கள்....

அனைவரும் சூழ கேக் வெட்டப்பட்டது
எல்லோருக்கும் ஊட்டப்பட்டது
முகத்தில் பூசப்பட்டது
எடுத்த வகுப்பு நிறுத்தப்பட்டது
அனுபவம் பகிரப்பட்டது – கிளாஸ் போச்சு,
மகிழ்வுடன் விடை பெற்றான்....

மாணவர்கள் பரிசளித்தது நிறைய பேனா
ஆர்குட்டில் அழகான வாழ்த்துக்கள்
பேஸ்புக்கில் பேமிலி பேக் அளவு வாழ்த்துக்கள்

மாலை...
சாக்லேட், பேனா, பென்சில், ஸ்கேல், ரப்பருடன்
காக்கும் கரங்கள் சென்றான்
குழந்தைகள் அவனை கண்டதும் ஒரே மகிழ்ச்சி
ஒரு குழந்தை கேட்டது
எங்களை மறந்துட்டியானா
எதுவும் பதில் பேச திரானி அற்றவனாய் நின்றான்
வாங்கியது கொடுக்கப்பட்டது
வாழ்த்துக்கள் சொல்லப்பட்டது
இரவு உணவு முடிக்கப்பட்டது
கொஞ்சம் பணம் கொடுக்கப்பட்டது

எந்த வருடமும் இல்லாத அதிகப்படியான வாழ்த்துக்கள்
பெயரே தெரியாத நண்பர்கள் பலர் மெசேஜ் மூலம் வாழ்த்துக்கள்
எல்லாவற்றிற்கும் காரணம் தங்கை புஜ்ஜிமா- நன்றி.

இரவு தூங்க போகும் போது அவள் தொடர்பில்
உனக்கு பிறந்த நாள் என்பது எனக்கு தெரியும்டா
அதற்குள் நீ மெசேஜ் பண்ணிட்ட
நீ சொல்லி எப்படிடா வாழ்த்துவது என்று புலம்பல்
எதையும் கண்டுகொள்ளாத அவன் எங்கே பிறந்த நாளுக்கு பரிசு
இவனிடத்தில் கோபத்தை எதிர்பார்த்த அவள்
இதை எதிர்பார்க்கவில்லை
என்ன வேண்டும் என்றான் என்பதும்
என்ன அவள் கொடுத்தாள் என்பதும்
நமக்கு தெரியாதா என்ன.....?

மகிழ்ச்சி அவன் வாழ்வில் பெருகட்டும்
பண்பாய் பழகட்டும்
நாமும் வாழ்த்துவோம்....

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தோழமையே.............!!!!!!!!



பேஸ் புக்கில்..
தென் பாண்டிச் சிங்கம்
சிவகங்கை திரைச்சிற்பியே
நீ வரையும் திரை ஓவியம் செம்மையாக..
பாராட்டுக்கள் குவிய
நல் வாழ்வு மலர
நாணயம் பெருக
சந்தோசம்  உன் வாழ்வில் நடனமிட
என்றும் நீ திரையில் வலம் வருவாய்...
ஆண்டவன் அருள் புரிவார்....
நீடூழி வாழ்க..
பிறந்த நாள் வாழ்த்துக்கள்


 -B.சிங்காரவேலு DFT...

பேஸ் புக்கில் வந்த வாழ்த்து





பேஸ்புக்கில் சாப்ட்வியூ மாணவன் பிரபுவின் வாழ்த்து

வகுப்பில் வெட்டப்பட்ட கேக், அருகில் கேக் வாங்கி வந்த மாணவன் மணிகண்டன்

-தாஸ்..,

Saturday, 15 October 2011

பட்டினி போராட்டம்




பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் மரண தண்டனையை நிறுத்த வேண்டுமென சென்னை கோயம்பேட்டில் தொடர் பட்டினி போராட்டம் நடைபெற்று வருகிறது...
தமிழ் சினிமா இணைய இதழின் "ஈழம்" பகுதியில் இதை தொடந்து பதிவு செய்து வருகிறேன்...

வை கோ பேசியது...


இது வரை கலந்து கொண்ட அமைப்புகள் விவரம்...

-தாஸ்..,
 (எ)
தமிழ் தாசன்..,

பீச்கேர்ள்ஸ்

 மொக்கை  போடுவதற்கென்று ஒரு டிவி  ஷோ இது...
ஆனால், பார்த்தால் பொழுது போகும்....

நண்பர் மோகன் இந்த ஷோ வின் மல்டி கேமரா செட் அப் ஒளிப்பதிவாளர்களில் ஒருவர்...


படிக்க ...,

http://www.tamilcinema.com/cinenews/gallery/tv/news/beachgirls.asp

-தாஸ்..,

சினிமா வரலாறு

எனக்கு சினிமா வரலாறு கற்றுகொடுத்த பேராசிரியர் மதன்கேப்ரியல் சார் எழுதிய புத்தக விமர்சனம் ...


திரைக்கலை பிறந்த கதை...

http://www.tamilcinema.com/general/books/thiraikalai.asp


-தாஸ்..,

Friday, 14 October 2011

தங்கச்சி


தங்கை அவ்ளோ அழகான ஒரு உறவு, நம்மை விட சின்ன வயதாக  இருந்து நம் சொல்லுக்கு கட்டுபடுகிற ’தேவதை’ . இப்படி அடுக்கிகிட்டே போகாலாம்...
விசயத்துக்கு வரேன்....

எனக்கு தங்கச்சினா அவ்ளோ பிடிக்கும் அதுக்கு காரணமே என் ரேணு தான். என் மொத்த பாசத்தையும் குத்தகைக்கு எடுத்த ம்ம்ம்ம்ம் இல்ல மொத்த பாசத்தையும் விலைக்கு வாங்கிய பொண்ணு...

எங்கம்மா அப்பாவுக்கு நான் தான் கடைசி பிள்ளை......

அப்புறம் எப்படி ரேணுன்னு யோசிக்காம அடுத்த வரியை படிக்க ஆரம்பிச்சுட்டிங்களே, நல்ல விசயம் தான்...

எங்க சித்தி பொண்ணுங்க...

இப்படி பிரிச்சு சொல்றதே எனக்கு பிடிக்காது. பிடிக்காவிட்டாலும் இந்த பதிவில் சொல்ல தோணுச்சு, செய்துட்டேன்...

என்னோட சித்தி அம்மாவோட கூட பிறந்த தங்கை என்பதால் நான் சின்ன வயசுலயே உரிமையா எங்கம்மாகிட்ட சொன்னேனாம். அம்மா தங்கச்சிய நம்ம வீட்டுக்கு தூக்கிட்டு போய்டுவோம்னு... என் ஆசைக்கு தடையா இல்லாத எங்கம்மா ரேணுவை தாய் பால் குடிப்பதை மறந்ததும் எங்க வீட்டுக்கு தூக்கிட்டு வந்துட்டாங்க.

சின்ன பிள்ளையில இருந்து எங்க வீட்ல தான் வளருது ரேணு.. நானா சொல்லாத வரைக்கும் யாருக்கும் தெரியாது ரேணு உடன் பிறந்த சகோதரி இல்லைனு... அந்த பாகுபாட்டை நாங்க ரெண்டு பேருமே பார்த்தது இல்லை. இங்கே சொல்ல வேண்டிய சூழல்...
நானும் என் ரேணுவும் நல்ல நண்பர்கள். உலகில் நல்ல தோழி கிடைக்கிறது கஸ்டம். அந்த தோழி கடைசிவரைக்கும் கூட இருக்கிறது அதைவிட கஸ்டம். எனக்கு இந்த பிரச்சனையே இல்லை. என் முதல் தோழி என் தங்கை என்பதால்...

நாங்க இருவரும் சும்மா விளையாட்டுக்கு கூட சண்டை போட்டுக்க மாட்டோம். பக்கத்து வீட்டு பசங்க அம்மாக்களுக்கு நாங்க தான் எடுத்துக்காட்டு . ரேணுவை பாரு அவங்க அண்ணன் கூட சண்டை போடாம இருக்கு, நீங்களும் தான் இருக்கிங்களே என்று அவங்க சொல்லும் போது எங்கம்மா சொல்வாங்க என் பிள்ளைகளுக்கு திஸ்டி சுத்தி போடனும்னு...

என் ஸ்கூல் டேஸ்ல ரேணு என்னோட ரெண்டு வருடம் ஜுனியர். ஒரே ஸ்கூல். நான் ஐந்தாவது படிக்கும் போது ரேணு மூணாவது.. அப்புறம் ரெண்டு பேரும் உயர்கல்விக்காக வெவ்வேறு பள்ளி. ஆனால், பக்கத்துல பக்கத்துல.. எனக்கு ஸ்கூல் முதலில் விட்டா நான் வெயிட் பண்ணுவேன். ரேணுவுக்கு விட்டா அது காத்து இருக்கும்...

கல்லூரி காலம் வந்து தான் எங்களை பிரித்தது. காலேஜ் படிக்க சென்னை வந்துட்டேன். நான் ரொம்ப மிஸ் பண்ணுனேன் ரேணுவை.. அதுவும் தான். ஏனோ, நாங்கள் பண்டைய கால சகோதர சகோதரிகள் இல்லயே, இந்த காலத்துல தொடர்புக்கு தான் இருக்கவே இருக்கு செல்போன். ரெண்டு பேரும் நைட்ல பேசுவோம் அவ்ளோ நேரம்.. எங்க வீட்ல ரேணுவை திட்டுற சத்தம் கேட்கும். ரெண்டு பேரும் அப்படி என்ன தான் பேசுவிங்களோனு தெரியல...

கல்லூரி கால சீனியர்களை அக்கானு கூப்பிட்டு இருக்கேன் என்னை அண்ணானு கூப்பிட என்னமோ தெரியல என் ஜுனியர் யாருமே பெண்கள் இல்லை. அது என்னமோ எனக்கு பெருசா தோணல..

இப்படி ஓடிக்கிட்டு இருந்தப்ப அண்ணானு ஒரு பொண்ணு பாசமா கூப்பிட்டாங்க. மரியாதை நிமித்தம் தான். அப்புறம் என் நம்பரை என் நண்பரிடம் வாங்கி எனக்கு மெசேஜ். தெரியாத நம்பரிலிருந்து மெசேஜ் வந்தா யார் நீங்கன்னு கேட்பதை தான் நானும் செய்தேன். பெயர் சொல்லாம சேட்டிங் நடந்தது. என்னை பற்றிய எல்லா விவரமும் சொன்னதால் அவங்க அனுப்புன மெசேஜ்க்கு எல்லாம் பதிலளிக்கிறேன் யாருன்னே தெரியாம அப்புறம் கண்டுபிடுச்சுட்டேன் இவங்க தான்னு...

அப்புறம் எப்போதாவது ஒரு கால், எப்போதுமே மெசேஜ்.. இப்படி போனது எங்கள் உறவு. அவங்க பிறந்த நாளின் போது நான் அவங்களுக்கு தெரியாம கேக் வாங்கிட்டு வந்து வெட்டி கொண்டாடினேன். அப்புறம், ரொம்ப பாசமா ஆகிட்டாங்க...

என் பிறந்த நாளுக்கு எனக்கு ஒரு சட்டை வாங்கி பரிசளிப்பதாக சரவணா ஸ்டோர் போனோம். அவங்களுக்கு செலவு அதிகம் ஆகிட கூடாதுன்னு கம்மியான விலையில் ஒரு சட்டையை வாங்கி கொண்டேன். அது அவங்களுக்கும் தெரியும்...

இந்த சமயத்தில் சென்னை தங்கை காதல் நோயால் பாதிக்கப்பட்டாங்க, தேர்ந்தெடுத்த காதலன் சரியில்லை. அவன் நேராகவே சொல்லிட்டான் உன்னை பிடிக்கலைனு. இவங்க தலைவனை நினைத்து உருகும் தலைவியைபோல் உருகுனாங்க...

இவங்களோட தோழிகள் எல்லாரும் இவங்களை கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க, இதுல ஒரு தோழி ரொம்ப இவங்க மேல அக்கறையா இருக்கோம்ற பேருல பிள்ளைய போட்டு பாடா படுத்தி 
அட்வைஸ்ன்ற பேருல கொன்னுருக்கு...

இந்த சமயத்துல ஒரே ஆறுதல் நான் மட்டும் தான். தினமும் போன் போட்டு ஒரே அழுகையா இருக்கும். எவ்ளோ வேலையா இருந்தாலும் போன் அட்டன் பண்ணி ஆறுதல் சொல்வேன்...

நைட் நேரத்துல ரேணுகிட்ட பேசுற நேரத்தை விட இவங்ககிட்ட பேசுற நேரம் அதிகமானது. ஆறுதல் சொல்லாவிட்டாலும் புலம்பலை கேட்கவாவது ஒரு துணை வேணும். அப்படி தான் நான் இருந்தேன்...
சமாதானம் பண்ணுவேன், ஒரு நாள் வெளியே கூட்டிகிட்டு போய் நிறைய பேசி ஒட்டு மொத்த பிரச்சனைகளுக்கும் தீர்வு வருகிற மாதிரி பேசினேன். அவனுக்கு உன்னை கட்டிக்க குடுத்து வைக்கலடா விட்ருனு சொல்லி அந்த இடத்துல இருந்த சின்ன பசங்க விளையாடுவதை எல்லாம் பார்த்து சிரித்து ஒரு வழியா கொஞ்சம் பழைய நிலைக்கு மாறிட்டாங்க...
அவங்களின் இழந்த சந்தோசத்தை மீட்டு கொடுத்தாலோ என்னவோ என் மேல் ரொம்ப பாசமாகிட்டாங்க. இவங்க கூட வேலை பாக்குற எல்லாரும் என்னை அண்ணானு கூப்பிடுகிற தங்கை ஆகி போனாங்க. மகிழ்ச்சி தான்..

பெயரையே சொல்ல மறந்துட்டனே...

சந்தியா இது தான் அவங்க பேரு நான் செல்லமா புஜ்ஜினும் ஊலமூக்கினும் கூப்பிடுவேன். ( அழுகும் போது மூக்குல தண்ணி வரும் இதை தான் தென்மாவட்ட வட்டார வழக்குல  ஊலமூக்கினு சொல்வாங்க) இப்படி ரெண்டு மாதிரியா கூப்பிடுறதும் அவங்களுக்கு பிடிக்கும்.

புஜ்ஜி- அவங்க அழுகையை நிறுத்த மட்டும் தான் என்னோட வார்த்தையை கேட்டாங்க, மற்றபடி எது சொன்னாலும் அதை நடைமுறைப்படுத்துற மாதிரி கேட்டுவிட்டு அதுக்கு எதிர்புறமாக தான் நடப்பாங்க..

சில எடுத்துக்காட்டு :-

சென்னையில இருக்குற எங்க மாமாவை பார்க்க கூட்டிகிட்டு போனேன், அவர் ரொம்ப மாடர்ன் பொண்ணுங்களை பார்த்தாலே பிடிக்காது. அவரை பார்க்க ஜீன்ஸ் போட்டுகிட்டு வராதிங்கன்னு சொன்னேன். அதை தான் போட்டுகிட்டு வந்தாங்க, ஆசையா செயின் வாங்கி குடுத்தேன் சும்மா கொஞ்ச நேரம் கூட அதை போடல, ஏன்னா மாடர்ன் டிரெஸ்ல இதை போட கூடாதுன்னு சட்டம் போட்டதை போல் சொன்னாங்க...

புஜ்ஜி வேலை பாக்குற ஆபிஸ்ல அவங்களுக்கு மெண்டலி டார்ச்சர் அவங்க தோழி மூலம் ஆனது, அப்ப, நான் சொன்னேன் ஆபிஸ் விட்டு நின்னுடுங்கன்னு... நிக்கல...

ஒரு சமயத்துல ஆபிஸ்ல எதோ சொல்லிட்டாங்க, அங்க இருக்குறவங்க நடந்துக்கிறது சரி இல்லைனு சொன்னாங்க, இருங்க சமாளிக்கலாம்னு சொன்னேன். எங்கிட்ட சொல்லவே இல்லை ஊருக்கு கிளம்பிட்டாங்க...

ஊருல போனப்ப எனக்கு ரொம்ப கஸ்டமா இருந்தது. என்னடா சென்னை தங்கை பிரிஞ்சு போச்சேன்னு.. சரி, ஊருலயே இருங்க பார்த்துக்கலாம்னு நான்  சென்னையில ரேணுவுக்கும், புஜ்ஜிக்கும் வேலை பார்த்து வைத்து இருந்தேன்...

ரேணு வர தாமதம் ஆகும். புஜ்ஜி சென்னை வந்துட்டாங்க, அவங்க வந்ததை சொல்லவே இல்லை, யாரோ சொல்லி அவங்க சென்னை வந்தது தெரிய வருது. ஏன் என்கிட்ட மறைச்சாங்கன்னு தெரியல, நானா எதுவும் சொல்லல, சொன்னா கேட்டுடுவாங்களா என்ன ? ஒரு வாரத்துக்கு பிறகு ஒரு மெசேஜ் நான் சென்னையில் வேலை பாக்குறேன்னு...

நான் எதுவுமே சொல்லல..., பேசனும்னு தோணுச்சுனா போன் போடுவேன், ஒழுங்கா பேச மாட்டாங்க, இப்ப எல்லாம் மெசேஜ் பண்றதும் இல்ல. என் மேல என்ன அவங்களுக்கு கோபம்னும் தெரியல.. அவங்க மேல எனக்கு கோபம் எல்லாம் எதுவும் இல்ல, சின்ன பிள்ளை மாதிரி ஒரு மெச்சூரிட்டி இல்லா பொசசிவ் மனநிலை......

சென்னையில் மறுபடியும் ஒரு தங்கை பிரியமாக இருக்கமாட்டாங்கன்னு சில நாட்களுக்கு முன் டைரியில் எழுதி இருந்தேன். இப்ப அதை அழிச்சுட்டேன்..

என் பிரியமுள்ள ஸ்ரீ....
புதிய தங்கை....

நானும் புஜ்ஜியும் எங்கே போனோமோ அங்க தான் ஸ்ரீ க்கு இப்ப பிறந்த நாள் கொண்டாடினேன். நான் ஸ்ரீ க்கு ஒரு ரூபா கூட செலவு செய்யல, எனக்காக ஸ்ரீ இதுவரை செலவு செய்தது இரண்டு ஆயிரத்தை தாண்டுகிறது...

இந்த தங்கை நான் என்ன சொன்னாலும் ஏன்னு கேக்குறது இல்ல, ஏன்னா, செய்துவிட்டு தான் எதுக்குனா அப்டி சொன்னிங்கன்னு கேட்கும்.  சொல்ல மறந்துட்டேன் என் ஸ்ரீ க்கு 19 வயசுலயே கல்யாணம் ஆகிடுச்சு, இப்ப அழகு தேவதையா ஒரு பெண் குழந்தை. இன்னொரு வகையில பார்த்தா என் தங்கை ஸ்ரீ எனக்கு அத்தை தானே.... அவ்வப்போது அத்தைனு கூப்பிடுவேன். அது ஸ்ரீ க்கு பிடிக்காது. எனக்காக சகிச்சுகிறாங்க. என் ஸ்ரீயோட நண்பர்கள் இப்ப என் அன்பு தம்பி ஆகி போனார்கள். அதுல ஒரு குந்தானி பையன்  இருக்கு. அது மூலமாக தான் ஸ்ரீ எனக்கு பழக்கம். அந்த குந்தானிக்கு நான்னா அம்புட்டு பிரியம்... எனக்கும் தான்...

ஒரு நாள் நான் ஒரு வார்த்தை தப்பா சொன்னதுக்கு ஸ்ரீ ஒரே அழுகை, மறுபடியும் சமாதானம் செய்கிறேன்... 

-தங்கை பிரியன்...,
  

Monday, 3 October 2011

வேண்டாம் மரணம்

மரண தண்டனை வேண்டாம்...
பழ.நெடுமாறன் உண்ணாவிரதம்... 
படிக்க...


http://www.tamilcinema.com/general/interview/nedumaran_fasting.asp


படங்கள் பார்க்க...  


http://www.tamilcinema.com/general/interview/gallery/nedumaran_fasting/photosxml.aspx

தமிழ் தாசன் என்பதும் இந்த தாஸ் தான்...




ஊர் சுற்றிப் புராணம்


பயணிக்க ஆசையை அதிக படுத்திய புத்தகம்...
விரிவாய் விரைவில் எழுதுகிறேன்...

Related Posts Plugin for WordPress, Blogger...