Monday, 22 August 2011

கற்பகத்தரு



தமிழ் அறிஞர்களும், முன்னோர்களும் பனைமரத்தை கற்பகத்தரு
என்று அழைத்தனர் . தமிழர்களின் அடையாளமாகவும், உலகின் குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டும்   காணப்படுகின்ற பனைமரத்தை பற்றியும், அதன் ஆரம்பகாலத்திலிருந்து எப்படி வளர்ந்து வருகிறது. எந்த மாதிரியான இடத்தில் வளரும், அதன் இயல்பு என்ன என்பதையும், பனைமரத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் போன்றவற்றை தகுந்த ஆதார வீடியோ காட்சிகளுடன் படமாக்கப்பட்டுள்ள ஆவணப்படம் கற்பகத்தரு(பயன் தரும் பனைமரம்)

கிராமப்புற வயல்வெளிகளிலும், நகர்ப்புற சாலை ஓரங்களிலும் தினமும் பார்க்கப்படுகின்றது பனைமரம் . அந்த பனைமரம் பல மருத்துவ குணங்களை கொண்டு  இருக்கின்றது என்பதையும், பனைமரத்தில் வீணாகக்கூடிய பொருள்கள் எதுவும் இல்லை. பல வகையான பயன்பாட்டிற்கு பயன்படுகிறது போன்ற பல தகவல்களை இந்த ஆவணப்படம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பல கிராமங்களில் ஒற்றை பனைமரம் சகுணத்தடையாக பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் காஞ்சிபுர மாவட்டத்தில் ஒரு கோவிலிள் உள்ள பனைமரத்திலிருந்து விழும் பனம்பழம் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகிறது என்றெல்லாம் இரு விதமாக நம்பப்படுகிறது.

இது போன்ற இன்னும் சுவாரசியமான தகவல்களையும் ,பயன் தரும் விசயங்களையும் தருகிறது கற்பகத்தரு .
சாப்ட்வியூ ஊடகக்கல்லூரி மாணவர்களால் எடுக்கப்பட்டது.       

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...