விஜய் டிவி புதுமையான நிகழ்ச்சிகளின் முன்னோடி என்றே சொல்ல வேண்டும் அந்த அளவுக்கு இன்றைய பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் முதன் முதலில்விஜய் டிவி ஒளிபரப்பியதாகவே இருந்து வருகிறது. அந்த வரிசையில் ஒரு தொடர் சரவணன் மீனாட்சி . இளைய தலைமுறையினருக்கு காதல் பிடித்தமானதொரு விசயம் தானே. இந்த தொடரில் அதற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. காலங்காலமாக சீரியல் என்றாலே அழுகை எனும் விதியை மாற்றி இருக்கிறது இந்த தொடர். அதற்காக செண்டிமெண்ட் இல்லை என்றும் சொல்லி விட முடியாது. தேவைக்கு ஏற்ப சரியாக இருந்து வருகிறது. கல்லூரி மாணவ மாணவிகள் தான் இதற்கு முன்னனி ரசிகர்களாக இருந்து வருகிறார்கள். சென்னையில் ரேடியோ மெர்ச்சியில் வேலை பார்க்கும் சரவணனுக்கும் திருநெல்வேலியில் டீச்சராக வேலை பார்க்கும் மீனாட்சிக்கும் காதல். தூரக்காதல் எப்படி சாத்தியமானது என்பது தான் கதையே.. என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு எனும் சீரியல் பாடல் இளசுகளின் ரிங்டோனாக ஒளித்தது. அடுத்ததாக இப்போது சரவணன் மீனாட்சியில் வரும் ஏலேலோ ஏலேலோ அறிமுக பாடல்... இனி வரும் எபிசோடுகளில் எல்லா சீரியல் மாதிரி ஓவரா அழு(கை)காட்சி இல்லாம இருந்தா ஹிட்......!!!!!! |
Sunday, 5 February 2012
சரவணன் மீனாட்சி - தொலைக்காட்சி தொடர் விமர்சனம்
லேபிள்கள்:
www.tamilcinema.com,
சின்னதிரை,
தொலைக்காட்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment