செம டயர்டுபா, எஸ்டர்டே நைட் தான் ஊர்ல இருந்து வந்தேன், ஒரே பேக் பெயின் என்றெல்லாம் தமிழ் பாதி ஆங்கிலம் பாதி கலந்து பேசி தங்களது பயண களைப்பை பகிர்ந்து கொள்ளும் தோழமைகளை தினமும் பார்க்கிறேன்...
எனக்கு ஒரு விசயம் தான் புரிய மாட்டேங்கிது. பயணம் களைப்பை தருமா ?
எனக்கு இன்று வரை அப்படி இருந்தது இல்லை . ஏனெனில் எனக்கு புடிச்ச சிலவற்றில் பயணம் செய்வது என்பது ரொம்ம்ம்ம்ம்பபபபப புடிச்ச ஒன்று..
குடும்ப திருவிழாவுக்காக, வேலை விசயமா, காரணமே இல்லாம, ஊர் சுற்றல் புராணம், இப்படி எல்லாம் எனது பயணத்தை வரையறுக்கலாம் … ஆனால் எப்படியோ பயணிப்பது என்பது பிடித்த செயல்...
பயணம் எதை நோக்கி
இன்று வரை எனக்கு தெரிந்த கேள்வி இது...
இன்று வரை பதில் தெரியவில்லை..
பதிலை நோக்கி தான் பயணமும்...............
மேலும்
சில மனிதர்களை பற்றி படிக்கும் போது அவர்கள் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய அனுபவங்கள் பயணங்களில் கிடைத்தது என்கிறார்கள்.
நானும் பயணிக்கிறேன்....

No comments:
Post a Comment