Monday, 8 August 2011

குத்துவிளக்கு

சில விழாக்களில் குத்துவிளக்கு ஏற்றும் வைபவம் என்று இதற்காக கொஞ்ச நேரம் வீணடிக்கப்படும். எனக்கு இதை பார்த்தாலே எரிச்சலா வரும்...

குத்து விளக்கை இந்த விழாவுக்கு என்று தனியாக வாடகைக்கு வாங்கி அதுல எண்ணை ஊற்றி அதை பத்த வச்சு கொஞ்ச நேரத்தில அதை அணைத்து வைத்து விடுவார்கள்...

சில விழாக்களில் அதிகப்படியான விருந்தினர்கள் வந்து இருப்பார்கள் ஒரு குத்து விளக்கில் அதிகப்படியாக ஆறு திரிகள் வரை ஏற்றலாம், அதிகப்படியான விருந்தினர்கள் வந்து இருப்பின் ஒரு சிலரை கூப்பிட்டு ஒரு சிலரை கூப்பிடா விட்டால் நல்லா இருக்காது என்பதற்காக அனைவரையும் மேடை ஏற்றி ஏற்கனவே எரிகிற குத்து விளக்கை ஏற்ற சொல்லி கையில் மெழுகுவர்த்தியை கொடுப்பார்கள்.

நம்மையும் மதிச்சு கூப்பிட்டாங்களே என்று அந்த சிறப்பு விருந்தினரும் எரிகிற குத்துவிளக்கை புதிதாக ஏற்றுவது போல் பாவலா செய்து விட்டு வருவார்...

ஒரு சில சிறப்பு விருந்தினருடன் அவருடைய அல்லக்கைகள் வரும் அதுக என்ன பண்ணுங்க தெரியுமா ? ( மரியாதை எங்கேனு கேக்க கூடாது )...........

நம்மாலு குத்துவிளக்கு ஏத்த போறார், ஆனால் குத்துவிளக்கின் அனைத்து திரியுமே எரியுதேன்னு, இது போய் எரிகிற குத்து விளக்கின் ஒரு திரியை கையாலேயே அனைச்சுடும். அப்புறம் அந்த சிறப்பாளர் குத்துவிளக்கு ஏற்றுவார். ( எம்புட்டு மொதலாளி விசுவாசம் பாருங்க )..   

இதை ஒரு தலைப்பா எடுத்துகிட்டு அலச காரணம் இருக்கு...

இந்த பிரச்சனை எதுவும் இல்லாமல் ஒரு குத்துவிளக்கு ஏற்றப்பட்டுள்ளது...


ஒரு ஓவிய கண்காட்சியை துவக்க ஜனாதிபதி பிரதீபா(பாட்டி)பாட்டீல் குத்துவிளக்கு படத்தில் திரி பற்ற வைத்து எரிய வேண்டிய இடத்தில் வரைந்து இருக்கார்....  
( நல்ல கற்பனை ஆற்றல், வாழ்த்து சொல்லனும்ல.....)
மேலே உள்ள படத்தை பார்த்தால் புரியும்.......
தின நாளிதலை பார்த்ததும் இதை பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது...


இதை எல்லாரும் பின்பற்றுங்கப்பான்னு நான் சொன்னா கேட்டுரவா போறாங்க...

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...