(ஆமா "சார்ட்பிலிம்"ன்னா என்ன என்று தெரியாமல் கேள்வி கேட்கும் அறிவு ஜீவிகளுக்காக- குறும்படம் என்பதை தான் ஆங்கிலத்தில் சார்ட்பிலிம் என்கிறோம் . உங்களால் சொல்ல முடிகிற ஒரு விசயத்தை அழகாக உங்களோட செலவுலேயே குட்டியா 30 நிமிடத்துக்குள்ள சொல்றது தான் "சார்ட்பிலிம்". மேலும் விரிவாக சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்காது எனும் நம்பிக்கையில் தொடர்கிறேன் )
ஒரு இயக்குனரிடம் சினிமாவை பற்றி ஒன்னுமே தெரியாமல் உதவியாளராக சேர்ந்து, அடிமை போல் வேலை செய்து சினிமா கற்று கொண்டு தனியாக படம் பண்ணி சாதித்தவர்கள் இங்கே அதிகம். அவர்கள் பட்ட கஸ்டங்கள் இப்போதைய தலைமுறை உதவி இயக்குனர்களுக்கு குறைவு தான். ( சுத்தமாக இல்லை என்று சொல்ல ஆசை தான் .....ம்ம்ம்ம்ம்ம்....)
தற்போதைய உதவி இயக்குனர்களில் பலர் தங்களின் சொந்த முயற்சியிலேயே குறும்படங்கள் எடுத்துவிடுகின்றனர். அதனால், ஒரளவுக்கு சினிமாவை பற்றி ஏற்கனவே தெரிந்து வைத்து இருக்கிறான் என இயக்குனர்களால் மதிக்கபடுகின்றனர்.
இதெல்லாம் குறும்படங்களால் சாத்தியமானது. ஆனால் சினிமாவுக்குள் நுழைய ஒரு விசிட்டிங்கார்டு மாதிரி தான் பலர் குறும்படங்களை பயன்படுத்துகின்றனர். இந்த பார்வை தவறானது.
ஏனெனில், சர்வதேச அளவில் குறும்படங்கள் அங்கிகரிக்கப்பட்டு வருகிறது.
கேன்ஸ், டொரண்டோ போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் குறும்படங்கள் திரையிட்டு சிறந்த படங்களுக்கு பரிசு அளிக்கப்படுகிறது.
அதேபோல இந்தியாவில் நடக்கும் கோவா, கேரளா போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிட்டு சிறந்த படங்களுக்கு பரிசு அளிக்கப்படுகிறது.
எனவே குறும்படத்தை ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்திலேயே பார்க்காமல் பார்வையை மாற்றுங்கள் , பட விழாக்களுக்கு அனுப்புங்கள் , பரிசுகளை வெல்லுங்கள் ...
உதாரணத்துக்கு ...
திரைப்படக்கல்லுரி மாணவர் அண்ணன் முரளிமனோகர் எடுத்த கர்ணமோட்சம் குறும்படம் சென்ற இடங்களில் எல்லாம் வெற்றி வாகை சூடியது . பல லட்சங்களை அள்ளியது. தேசிய விருது பெற்றது .
அண்ணன் பிரின்ஸ் என்னாரசு பெரியார் இயக்கிய திற குறும்படம் பரிசு பல பெற்று பாராட்டு மழையில் நனைந்து கொண்டு இருக்கிறது.
இந்த வரிசையில் அச்சுப்பிழை, இன்னும் நீளும் எனக்கு தான் ஞாபகம் வரல ...
( நீங்க என்ன குறும்படம் எடுத்திங்க என்று கேக்க முனைபவர்களுக்கு புன்னகையை பதிலாக தருகிறேன் . ( இதெல்லாம் ஒரு பொழப்பு ).......
-தாஸ்..,
1 comment:
மதிப்பிற்குரிய ஸ்ரீதர் சாரின் மேற்கோளுக்கு இணங்க மறுபடியும் திருத்தி எழுதப்பட்டு உள்ளது ....
Post a Comment