தமிழக அரசு மாற்றத்தால் தமிழ்சினிமாவில் உடனடி மாற்றங்கள் நடந்துள்ளது .
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ரஜினாமா செய்துள்ளார் ராமநாராயணன்.
பெப்சி தலைவர் பதவியை ரஜினாமா செய்துள்ளார் வி.சி. குகநாதன்.
இன்னும் சில நிருவாகிகள் ரஜினாமா செய்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில், திரைப்படங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி தயாரிப்பாளரின் பெயரே தெரியாமல்
விநியோக நிறுவனமே தயாரித்தது போல விளம்பரம் செய்து வந்தது.
இப்படி விநியோகம் செய்து வந்த சில நிறுவனங்களின் ஆதிக்கம் இனி கண்டிப்பாக இருக்காது .
விநியோகம் செய்தது மட்டும் அல்லாமல் திரையரங்கங்களின் உரிமையையும் குத்தகை முறை மூலம் பெற்று நல்ல படங்கள் சில வெளியிடவே முடியாமல் திணறி வெளிவந்தது.
இப்படிப்பட்ட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்களின் ஆதிக்கம் இனி குறையும்..
புதிதாய் ஏதேனும் தயாரிப்பு நிறுவனங்கள் முளைத்தால், அல்லது ஏற்கனவே இருந்த பழைய நிறுவனங்கள் தலைதூக்கும் பட்சத்தில்
அவை அடிமாட்டு வேலை எல்லாம் செய்யாமல் இருந்தால் சினிமாவின் நிலை கண்டிப்பாக மாறும்...
..தாஸ்..
No comments:
Post a Comment