தனிமனித வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆசை, கனவு, லட்சியம்
இருந்துகொண்டே இருக்கும். சிலர் அதை அடைந்து விடுவார்கள் பலர் அதை எல்லாம் அடைவதிலேயே தன் வாழ்நாளை கழித்து விடுவார்கள்.
மனரீதியாக பல பிரச்சனைகள் இருந்தும் இந்த சமூகத்தில் தான் யார் என அடையாளம் காட்ட முயன்று வெற்றி பெற்ற ஒருவரை பற்றி மற்றொருவரால் எழுதப்பட்டுள்ள நாவல் ”நியான் நகரம்” - ஒரு உண்மையை கதையை தழுவி என்றே சொல்லப்படுகிறது. எந்த அளவுக்கு உண்மை என்பது படித்தவர்களால் உணரமுடியும்.
எங்களை எங்களுக்கே அடையாளம் காட்டிய நட்புக்கு நன்றி சொல்லி காணிக்கையாக்கப்பட்டுள்ளது நியான் நகரம் – புக்கிசை . பல மாணவர்களின் கூட்டு உழைப்பால உருவாகியுள்ளது.
இசை என்பது திரைப்படங்களுக்கு மட்டுமே உருவாகி வரும் சூழ்நிலையில் இந்த நாவலுக்காக 17 பாடல்கள் எழுதப்பட்டு இசையுடன் இந்த நாவலிலேயே இணைக்கப்பட்டுள்ளது. புதிய முயற்சியை பாராட்டியே ஆக வேண்டும்.
-தாஸ்..,
No comments:
Post a Comment