Wednesday, 1 January 2020

பஞ்ச சீலம்



நீயா நானாவில் வருட ஜோதிடம் சொல்பவர்கள் ஒருபக்கம் சினிமாக்காரர்கள் ஒருபக்கம் பேசினார்கள்…

கோபிநாத் கேட்கிறார் யாருக்கு ஜோதிடம் தேவைப்படாதென்று?

ஒரு பெண் ஜோதிடர் சொன்னார் “பஞ்சமா தீமைகள்” செய்யாதவருக்கு ஜோதிடம் தேவைப்படாது.

அதாவது பஞ்சமா தீமைகள் என்று அவர்கள் சொல்ல வருவது

உயிர்வதை செய்யக்கூடாது, திருடக்கூடாது, பிழையுறும் காம செயல் செய்யக்கூடாது, பொய் பேசக்கூடாது,போதையை உண்டாக்கக் கூடியவற்றை எடுத்துக் கொள்ளக் கூடாது.

இதையேத்தானேடா 2500 வருடத்திற்கே முன்பே சொல்லிச் சென்றார் அரஹந்தர் புத்தர்…

பல பிரச்சனைகளின் ஆரம்பமே இந்த ஐந்திலிருந்து ஆரம்பிக்கிறது என்பதாலேயே புத்தரை பின்பற்றுபவர்கள் பஞ்சசீலம் என்று இவையை செய்ய மாட்டோமென அவர் முன் உறுதியேற்கின்றனர்.

#ஜெய்_பீம்
#நமோ_புத்தாய

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...