நடு இரவில் முதல் தொலைபேசி
அழைப்பில் குரலால்
வாழ்த்த விருப்பமிவில்லை..
காலையிலே உந்தன் வீட்டின்
அருகே கட் அவுட் வைத்து
வாழ்த்த விருப்பமிவில்லை..
முகநூலில் ஹாப்பி பர்ட்த்டே
என்று ஸ்டேடஸ் போட்டு
வாழ்த்த விருப்பமிவில்லை..
ஒரு கேக் வாங்கி உன்னை
ஆச்சரியப்படுத்தி வெட்ட சொல்லி
வாழ்த்த விருப்பமிவில்லை..
என் தோழிகளிடம் உனக்கு
பிறந்த நாள் வாழ்த்து சொல்ல சொல்லி
வாழ்த்த விருப்பமிவில்லை..
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
என்று எல்லாருக்கும் தெரிந்த வசனம் சொல்லி
வாழ்த்த விருப்பமிவில்லை..
பிறகு எப்படி வாழ்த்துவேன்.???????????????
அதான் சொல்லிட்டேனே உன் பிறந்த நாளுக்கு
எனக்கு வாழ்த்த
விருப்பமில்லை..
வாழ்த்து சொல்லிக்கொள்ள
சம்பிரதாயமான உறவா நம்முடையது????
இல்லையே..!!!!!!!!!!!!!
பாத்திருக்கிங்களா..???
ஒரு புரட்சியாளனை பாத்திருக்கிங்களா.?
கம்யூனிசமும் திராவிடமும் தலித்தியமும்
தமிழ் தேசியமும் பேசுகிற ஒரு
மனிதனை பாத்திருக்கிங்களா..??
பொருளாதாரத்தை சம்பாதிக்காவிட்டாலும் பொறுமையை
சம்பாதித்து வைத்திருப்பவனை பாத்திருக்கிங்களா...???
கம்யூனிச கட்டுடைப்புகளை கட்டவிழ்த்து
விளக்குகிற வித்தை கற்றவன் அவன்!
எந்த இசம் பேசினால் கம்யூனிசத்திற்கு
ஈடு இணை இல்லை என்பான் அவன்!!
பொது உடைமை சிந்தனை தவிர உலகில்
சிறந்த சிந்தனை இல்லை என்பான் அவன்!!!
மக்களுக்கான ஜனநாயகத்தையும்
தேசத்திற்கான அதிகாரத்தையும் பெற
அமைப்பாய் இயங்கும் தோழமைகளுடன்
சேர்ந்து இயங்கும் எனதருமை தோழன்தான் அவன்!!!!
யாரென்று தெரிகிறதா அவன் விழிவேந்தன் தான் என்று புரிகிறதா..????
ஏழு வருட நட்பில் ஒரு முறை கூட சண்டை வராமல்
பார்த்துக் கொண்டவன் அவன்!
மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்கா அப்படின்னா
என்று கேட்க வைத்தவன் அவன்!
நட்புக்குள் பெண்ணால், பணத்தால், பதவி உயர்வால் சண்டை
வருமாமே???
புஜ்ஜிமாவாலும் செல்லம்மாவாலும் நமக்குள்
சண்டை வரவில்லை
(அபி..???????)
எந்தன் உணவுக்கான தொகை உந்தன்
பையிலிருந்தே வருகிறது
உந்தன் தேநீருக்கான தொகை எந்தன்
கைகளிலிருந்தே வருகிறது
பிறகெப்படி, பணம் நமக்குள்
நீ எனக்கு அசோசியேட்டாக இருந்தாலும்
எனக்கு நீ அப்ரண்டீசாக வேலைபார்த்தாலும்
மகிழ்வுடனேயே ஏற்றுக்கொள்கிறோம்
பிறகெப்படி பதவி உயர்வால் – நமக்குள்
சண்டை வரும்..?
எனக்கு ஒரு ஆசை
எனக்கும் உனக்கும் சண்டை வர வேண்டும்
அது என்ன காரணத்திற்கு என்று எனக்கு தெரிந்து கொள்ள வேண்டும்..!
(கட்சியா...????)
பிறந்த நாள் வாழ்த்து
உனக்காய் உந்தன் பிறந்த
நாளுக்காய்
உன்னை கவர்ந்து விடவும்
உந்தன் மேல் நான் எவ்வளவு
பாசம் வைத்திருக்கிறேன் பார்
என்று நிரூபிக்கவும் ஏதேதோ
மெனக்கிடல்களில் முயன்றேன்
பிறகு விட்டு விட்டேன்
அப்படி செய்து தான் நான் உன்னை
கவர வேண்டுமா என்ன..????
போடா டேய்......
இயக்குனர் விழி
படப்பிடிப்பு தளத்தில் எல்லாரும் பரபரப்புடன் இயங்குவார்கள்
ஒருவன் மட்டும் சுறுசுறுப்புடன் இயங்குவான்
புரொடெக்சன் மேனேஜர் தம்பி தப்பு
நான் இயக்குனரிடம் சொல்வேன் என்று மிரட்டிச் சென்றார்
பாவம் காலையில் அந்த புரொடெக்சன் மேனேஜரே
காணாமல் போனார்
நான் + நீ
நான் எங்கெல்ஸா எனக்கு
தெரியாது –ஆனால்
எனக்கெப்போதும் நீ தான் மார்க்ஸ்
நீ துரியோதனனா எனக்கு
தெரியாது- ஆனால்
உனக்கு என்றென்றும் நான் தான் கர்ணன்
(நம்மிருவரை தவிர யாராலும்
புரிந்துகொள்ள முடியாத
வரிகள் இவை...)
வாழ்த்துக்கள்
என் செல்லத்துக்கு
மானமிகு தோழனுக்கு
மரியாதைக்குரிய காம்ரேட்டுக்கு
இனி வரும் காலம் உனக்கு
வசந்தத்தின் இடிமுழக்கமாய்
வாழ்நாளெல்லாம் வசந்த காலமே!!!
வாழ்க! வாழ்க!! வாழ்கவே!!!
No comments:
Post a Comment