Saturday, 2 March 2013

உழைப்பாளி தம்பி


கோவையில் நிழல்-பதியம் இணைந்து நடத்திய குறும்பட பயிற்சி பட்டறை ஒருங்கிணைப்பாளர்களில் நானும் ஒருவன், என்னுடன் இணைந்து பணியாற்றிய தோழனைப் பற்றி.... என் வரி..


ஒரு மனிதன்
இருபது வயதே இன்னும்
நிறைவுறாத இளைஞன்
65 பேரில் ஆரம்பித்து
15பேர் அதிகமாக
மொத்தம் 80 பேருக்கும் சேர்த்து
ஒருவனின் உழைப்பு
மின்சாரம் துண்டித்தால்
ஓட்டை ஜெரேட்டரை ஓடவைத்து
ஓடி ஓடி உணவு பரிமாறி
குடிக்க தண்ணீர்
சூடான தேநீர்
உணவு எல்லாம் உபசரித்து
தீர்ந்தால் உடனடியாய்
தயார் செய்து
ஓயாமல்
சளைக்காமல்
அவ்வபோது ஒளிப்பதிவும்
செய்து கொண்டு
என்னையும், எங்களையும் கவனித்துக்கொண்ட
என் உடன் பிறவா அன்புத் தம்பி

என்னால் பாரி என்றும்
எங்களால் விஜி என்றும்
அழைக்கப்படும்
எங்களின் கலைத் தந்தை
’நிழல்’ திருநாவுக்கரசு அய்யா பெற்றெடுத்த
இரண்டாவது தவப்புதல்வன்


உந்தன் கடின உழைப்புக்குத்
தலைவணங்குகிறேன்டா
தம்பி...

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...